ஒருநாள் போட்டிகளில் தனிநபராக அதிகபட்ச ரன்கள் (194) எடுத்த வீரர்களின் வரிசையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்தவர் பாகிஸ்தானின் சயீத் அன்வர்.அவரது சாதனையை யார் முறியடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நேரம் அது.
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (பிப்ரவரி 24, 2010) குவாலியர் மைதானத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் ஆட்டத்தில் மோதின.
இவ் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களும் பேட்டிங் செய்த சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.
இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை சச்சின் படைத்தார். இந்த கிரகத்தில் 200 ரன்கள் எட்டிய முதல் மனிதர், இவர் இந்தியாவை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர்.147 பந்துகளில் 200 ரன்கள். டேக் எ பவ் மாஸ்டர்,” என்று சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் எட்டியவுடன் அப்போதைய வர்ணனையாளர் கூறினார்கள்.
சச்சினின் இரட்டை சதத்துக்கு பின்னர் ஏழு இரட்டை சதங்கள் விளாசப்பட்டன.இந்திய வீரர்களான வீரேந்தர் சேவாக் ஒரு இரட்டை சதமும் மற்றும் ரோஹித் ஷர்மா மூன்று இரட்டை சதங்களையும் குவித்துள்ளனர். மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் மார்ட்டின் குப்டில் மற்றும் பாகிஸ்தானின் ஃபக்கர் ஜமான் ஆகியோர் இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.