உலகின் ஆழமான ஏரி என்றழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி தற்போது பனியால் முற்றிலும் உறைந்துபோய் உள்ளது. உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20 விழுக்காடு இந்த ஏரியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உறைந்து போன இந்த ஏரியில் சிறிய செஸ்னா 172 வகை விமானத்தை இறக்க விமானி வேடிம் மக்காரோவ் என்பவர் திட்டமிட்டார். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பனி உடையலாம் என்ற நிலை இருந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், அதனையும் மீறி பாளம் பாளமாக பிளவு பட்டு இந்த ஏரியின் உறைந்த மேற்பரப்பில் விமானத்தை இறக்கி சற்று நேரம் கழித்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.