சிம்பு அவரை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை வந்து கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் இவர் படப்பிடிப்பிற்கே வருவது இல்லை என பெரிய பிரச்சனை வெடித்தது என்று அனைவரும் அறிந்ததே.
அதை தொடர்ந்து தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சிம்பு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் நடிப்பில் மாநாடு படம் வேகவேகமாக நடந்து வருகின்றது, இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமாக நடக்கின்றது. 500க்கு மேற்பட்ட இளம் கலைஞர்களுடன் இப்படம் செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநாடு முடிந்து சிம்பு சேரன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக ஒரு தகவல் கசிந்தது. இந்த தகவல் உடனே சமூக வலைத்தளத்தில் பரவி, ஏதோ உண்மை போலவே ஆனது. ஆனால், இதுக்குறித்து விசாரிக்கையில் இந்த செய்தி உண்மையில்லை, இதை நம்ப வேண்டாம் என்றே தகவல்கள் கிடைத்துள்ளது.