அண்மையில் பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து தாம் வெளியேறுவதாக இளவரசர் ஹரி அவருடைய மனைவி மேகன் அறிவித்த அறிவிப்பு, பெரும் சல சலப்பை ஏற்படுத்தியது.
இந்த அறிவிப்பை பிரித்தானிய மகாராணி ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வி பலமாக எழுந்திருந்தது. பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்த இந்த அறிவிப்பு இறுதியில் ராணியின் ஒப்புதலை பெற்றுக்கொண்டது.
ஆகவே இம்மாதம், 31ல், அரசக் குடும்ப பொறுப்புகளில் இருந்து ஹரி மற்றும் மேகன் வெளியேற உள்ளனர்.
இந்தநிலையில், ராணி எலிசபெத் மகாராணியை, ஹரி தம்பதியினர் சந்தித்து உரையாடியுள்ளார்கள்.
இந்த உரையாடலின் போது ''எதிர்காலத்தில், தனது முடிவை மாற்றிக் கொள்ள ஹரி விரும்பினால், அவரை முழு மனதோடு வரவேற்கத் தாம் தயாராக உள்ளதாக ராணி கூறியுள்ளார்'' என, அரண்மனை தகவல்கள் தெரிவிப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.