கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக இலங்கை மதிப்பில் 281 கோடி (12 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது.
சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக 12 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. இந்த பணம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு நிதி உதவியாக வழங்கப்பட உள்ளது.
இது குறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை நாடுகள் மேலும் நிதிச்சுமைக்கு ஆளாகி உள்ளன. எனவே அந்த நாடுகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.
இதன் மூலம் கொரோனா நோய் பரப்பும் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிதி பயன்படுத்தப்படும். நிதி உதவி அதி விரைவில் வழங்கப்படும். இதன் மூலம் பல மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
இதற்கு முன்பு எபோலா, ஷிகா வைரஸ் நோய்களின் தாக்கத்தின் போதும் உலக வங்கி இது போன்று நிதி உதவி வழங்கியுள்ளது என்றார்.