வெய்யில் அதிகம் இருப்பதனால் வெளியில் செல்வதை முடிந்த அளவு தவிர்ப்பதுடன், அதிக உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் விளையாட்டு, மற்றும் உடல் இளைக்கும் கருமங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் அவதானத்துடன் இருத்தல் அவசியமாகும்.
அதிகரித்த வெப்பம் பல்வேறுபட்ட நோய்களை ஏற்படுத்தும் என்பதாலும், முடிந்தளவு அதிகளவு நீரை அருந்துமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முக்கியமாக, இந்த முதலாம் தவணை பகுதியில் பாடசாலைகளில் இல்ல விளையாட்டு போட்டிகளும் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருவதால், மாணவர்களின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.