இயற்கை முறையில் தலைக்கு எண்ணெய் வைப்பது சிறந்தது. முடிந்தளவு தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவி காலையில் தலை குளித்துவிடுங்கள்.
தலைமுடிக் கொட்டுவதற்கு அதன் வேர்கள் வலிமையாக இல்லாமல் இருப்பது தான் காரணம். எனவே தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால், வேர்கள் எண்ணெயை நன்கு உறிஞ்சிக்கொள்வதோடு, மேலும் மசாஜ் செய்யும்போது தலையில் ரத்த ஓட்டம் சீராகி முடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதனால் வேர்கள் வலிமையடைந்து தலைமுடி கொட்டுவதும் குறையும்.
காற்று மாசுபாட்டால் தலைமுடி சேதமாகுதல், தொற்று பேன் என்பன தலைமுடியை சேதப்படுத்தும். இதற்கு ஒரே தீர்வு தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான்.
தலைக்கு எண்ணெய் வைத்து நன்கு ஊறிய பின் தலைக்குக் குளித்துப் பாருங்கள். தலைமுடி பளபளவென மின்னும். பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.
பொடுகுத் தொல்லைக்கு தலைமுடி வறட்சியும் முக்கியக் காரணம். அதற்கு எண்ணெய் வைக்காதது முக்கியக் காரணம். தலைக்கு எண்ணெய் வைப்பது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்குகிறது. பொடுகுத் தொல்லையும் இருக்காது.
எனவே தாய்க்கு எண்ணெய் வைப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.