யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி மற்றும் மன்னார்,கொழும்பு,கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் நாளை நண்பகல் 12 மணியுடன் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த பிரிவு தெரிவித்துள்ளது.அன்றையதினம் நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி மற்றும் மன்னார்,கொழும்பு,கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
அந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதுடன் அன்றைய தினம் மீண்டும் 12 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.