அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனா தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு உலகமே இப்படி திணறிக்கொண்டு இருக்கும் போது வடகொரியா மட்டும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.கொரோனா அறிகுறியுடன் யாரும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை என வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் கொரோனா பரவாமல் இல்லாமல் இருக்க நிறைய காரணங்கள் உள்ளது.அங்கு கொரோனாவிற்கு எதிராக வடகொரியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி மாதம் வடகொரியா தங்கள் எல்லைகளை மூடிவிட்டது. அதோடு தங்கள் நாட்டில் இருந்து யாரும் வெளியேற கூடாது என்று உத்தரவிட்டது. சீனாவுடன் மொத்தமாக ஏற்றுமதி இறக்குமதியை நிறுத்திக் கொண்டது.
அதேபோல் வெளிநாட்டு வாழ் மக்கள் தங்கள் நாட்டில் இருந்தால் அவர்களை உடனே வெளியேற்றியது. டிசம்பருக்கு பின் தங்கள் நாட்டிற்குள் வந்த அனைவரையும் வெளியேற்றி எல்லைகளை சீல் வைத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
தென் கொரியாவில் கொரோனாவால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.கொரோனாவிற்கு எதிராக போராட்டத்தில் தென் கொரியா கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிபெற்று வரும் நிலையில் அண்டை நாடான வடகொரியாவில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கூறுவது உலகநாடுகளை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.