ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பிரித்தானியாவில் மாத்திரம் தொற்றின் அச்சறுத்தல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அங்கு கடந்த 24 மணி நேரங்களில் 765 பேர் பலியாகியுள்ளதுடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் 1 65 ஆயிரத்து 221 பேர் இதுவரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தெற்காசிய நாடுகளில் இந்தியாவிலேயே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அங்கு பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் 19 தொற்றால் 71 பேர் பலியாகியுள்ளதுடன் ஆயிரத்து 738 பேர் புதிதாக இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் அங்கு இந்த தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளதுடன் இந்தியாவில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, உலகலாவிய ரீதியில் கொரோனா வைரசால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 879 ஆக அதிகரித்துள்ளது.
உலகலாவிய ரீதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 32 இலட்சத்து 20 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த கொரோனா வைரஸில் இருந்து 1 மில்லியனைத் தாண்டியோர் குணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.