Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
பிரித்தானியாவில் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Sooriyan Gossip - பிரித்தானியாவில் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,348 Views
பிரித்தானியாவில் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை ஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பொது போக்குவரத்துக்களை தவிர்க்குமாறு பிரித்தானிய பிரதமர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு பொது இடங்கள் திறக்கப்படவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பிரித்தானியாவில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் அதில் 31 ஆயிரத்து 855 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 750 பேர் பலியாகியுள்ளதுடன் 20 ஆயிரத்து 329 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் அதிகரித்து வருகின்றது.

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்றால் 111 பேர் பலியாகியுள்ளதுடன் 4 ஆயிரத்து 353 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவில் குறித்த தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 212 பேர் பலியாகியுள்ளதுடன் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கமைய உலகலாவிய ரீதியில் இதுவரை 41 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 734 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த 14 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top