கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே பொருளாதார சரிவை சந்தித்திருப்பதோடு பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் இந்த வைரஸிற்கான மருந்தும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு முடிவுக்கு வராது என்றே வல்லுநர்கள் பலரின் கணிப்பும் உள்ளது இவ்வாறான சூழ்நிலையில், கொரோனா வைரஸ் மனிதர்களுடனேயே நீண்ட காலம் இருக்கலாம் எனவும், எப்போதும் அழியாமலேயே போகலாம் என்றும் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடந்த காணொலி செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில் 'கொரோனா வைரஸ் மனித சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும், நீண்ட காலம் இந்த வைரஸ் மனிதர்களுடனேயே இருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் பரவும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாகவும் கொரோனா வைரஸ் மாறலாம். அத்துடன் இந்த வைரஸ் எப்போதுமே அழியாமலும் போகலாம். எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை என்றாலும் அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நாம் கண்டறிந்துள்ளோம். கொரோனா பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பது கடினமாகவே உள்ளது.