இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக, அயகம, இரத்தினபுரி, எலப்பாத, கலவான, கிரியெல்ல ஆகிய பிரதேசசெயலக பிரிவிற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கி இருக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் புகைப்படங்கள் சிலவற்றை இணைத்துள்ளோம்.