உலகம் முழுவதும் பொருளாதரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், உலக அளவில் சுமார் 6 கோடி மக்கள் கடுமையான வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து உலக வங்கி தலைவர் ''டேவிட் மால்போஸ்'' கருத்து வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் வளர்ந்த பொருளாதாரங்கள் மூடப்படுவதால் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் வறுமையில் சிக்கி விடுவார்கள். இந்தக் காலப்பகுதியில் வறுமையை ஒழிப்பதில் நாம் செய்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக பெரும்பாலான பகுதி அகற்றப்படும்.
உலக வங்கி குழு விரிவான செயட்பாடுகளை முன்னெடுத்து 100 நாடுகளுக்கு அவசர உதவி ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தை மற்ற நன்கொடையாளர்கள் முன் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த 100 நாடுகளில் உலக அளவில் 90 சதவீத மக்கள் உள்ளனர். இவர்களில் 39 நாடுகள் ஆப்பிரிக்காவின் துணை சகாரா பகுதியை சேர்ந்தவை. அதேநேரத்தில் வேலைகளுக்கு உதவ பணம் மற்றும் பிற உதவிகள் தனியார்துறை பராமரிக்கப்பட வேண்டும். சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றை திறம்பட சமாளிக்கும் வகையில் நாடுகளுக்கு ஏற்ப இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.