சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து,ஒரே நாளில் 2,691 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது.ஐக்கிய அரபு எமிரேட்சின் பல இடங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி, பாதிப்புகளை அதிகப்படுத்தி உள்ளது.இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் நேற்று கூறுகையில்,சவுதியில் நோய் தொற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் புதிதாக 2,691 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 62,545 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் ஒரே நாளில் 1,844 பேர் குணமடைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து நாட்டில் நோய் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,478
276 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
புதிதாக 10 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளதாக.சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.