கொரோனா தாக்கத்தினால் பல நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள திரைப்பட துறையினரால் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருது விழா, 2021ம் ஆண்டு பிப்ரவரி 28ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வெளியாகும் திரைப்படங்களை பரீசிலித்து அதனடிப்படையில் விருது அளிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.
கொரோனா நிலவரத்தால் உலகம் முழுவதும் படங்கள் வெளியாகாமல் இருப்பதால், சிறந்த படங்களையும், சிறந்த திரைப்பட கலைஞர்களையும் தேர்வு செய்வது பாதிக்கப்படும் நிலை நேரிட்டுள்ளது. ஆதலால் ஒஸ்கார் விழா ஒத்தி வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.