சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது.
சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் 25 லட்சத்து 77 ஆயிரத்து 236 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் பிரேஷிலேயே கொவிட்19 தொற்றால் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய அங்கு ஆயிரத்து 294 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர்.
இதன்படி பிரேஷிலில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை பிரஷேலில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 24 ஆயிரத்து 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய அங்கு இதுவரையில் கொரோனா தொற்றுறுதியான 4 லட்சத்து 38 ஆயிரத்து 812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்று காரணமாக ஆயிரத்து 223 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றுறுதியான மேலும் 22 ஆயிரத்து 658 பேர் அடையாளம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளதோடு தொற்றுறுதியான 17 லட்சத்து 68 ஆயிரத்து 461 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுறுதியான 7 ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 177 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய இந்தியாவில் இதுவரையில் கொரோனா தொற்றுறுதியான ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 386 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது