கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை ஆரம்பமாகியுள்ள வேளையில்,கொரோனாவில் இருந்து முற்று முழுதாக மீண்டுள்ளதாக அறிவித்த 9 நாடுகளில் ஒன்றாக இருந்த நியூசிலாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
24 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.