பிரேசிலில் கொரோனாவால் பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 891,556 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசிலில் கொரோனாவுக்கு 44,118 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்வதால் சடலங்களை புதைக்க இடமில்லாமல் பிரேசில் திண்டாடி வருகின்றது.
பிரேசிலில் சா போலாவில் உள்ள மிகப்பெரிய கல்லறையான விலா ஃபோர்மோசா கல்லறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்துவிட்டு அந்த இடத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
மூன்று வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட இடங்களை தோண்டி அதில் உள்ள எலும்புகளை ஒரு பிளாஸ்டிக் பையில் இட்டு அதற்க்கு அடையாளமிடப்பட்டு பாதுகாப்பாக புதிதாக வாங்கப்பட்டுள்ள கனரக வாகனங்களில் வைக்கப்படவுள்ளன.