Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
முடக்கநிலைக்குள் மீண்டும் சென்னை - விரக்தியில் திரைத்துறைத் தொழிலாளர்கள்.

Sooriyan Gossip - முடக்கநிலைக்குள் மீண்டும் சென்னை - விரக்தியில் திரைத்துறைத் தொழிலாளர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

405 Views
உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து முடக்கியிருக்கும் கொரோனா வைரஸ், பாகுபாடின்றி எல்லா நாடுகளினதும் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டிருப்பது போல பொழுதுபோக்குத்துறையின் செயற்பாடுகளையும் செயலிழக்கச் செய்துள்ளது. 
உலக நாடுகளின் மிக முக்கிய வியாபார முதலீட்டுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சமாக அமைவது திரைத்துறை. பெரும் பொருட்செலவு மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், நடிக நடிகையர்களின் பங்களிப்புடன் பல நாட்களாக இடைவிடாது நடக்கும் ஒரு தொழில்துறை இது. இந்தநிலையில், கொரோனா தொற்று அபாயம் காரணமாக தமிழ்த் திரைத்துறையும் தற்போது பெரும் முடக்கநிலையில் காணப்படுகின்றது.

இந்தியாவில் மாதக்கணக்கில் தொடரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் சின்னத்திரை நீள்தொடர் நாடகங்களுக்கான படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை. இதனால், திரைத்துறை சார்ந்து தமது வாழ்க்கையை நடத்திச் செல்லும் தொழிலாளர்கள்
அன்றாட வாழ்விற்கான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் படப்பிடிப்புக்களை மேற்கொள்ள அனுமதி கோரி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணியினால் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

கொரோனா தொற்றுப் பரவல் குறித்த பல நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கி தொலைகாட்சி நீள்தொடர் படப்பிடிப்புக்களை மட்டும் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், ஒருவாறு தமது வாழ்வாதாரத்திற்கான வழி பிறந்துள்ளதே என்று திரைத்துறைசார் தொழிலாளர்கள் மகிழ்ந்திருக்க, மீண்டும் அவர்களது நிம்மதியில் மண் அள்ளிப்போட்டுள்ளது கொரோனா வைரஸ்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிச் செல்லும் பகுதிகளாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் குறித்த மாவட்டங்களில் முற்றுமுழுதான முடக்கலுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு மாநில அரசு பிறப்பித்துள்ளது.

மீண்டும் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, எதிர்வரும்19ம் திகதியிலிருந்து மறுபடியும் தொலைக்காட்சி நீள்தொடர் நாடகப் படப்பிடிப்புக்களை நிறுத்தி வைக்காத தீர்மானித்துள்ளதாக ஆர்.கே.செல்வமணி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புகள் ஆரம்பித்து வெறும் 5 நாட்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் மீண்டும் முடக்கநிலைக்கு திரும்பியிருப்பது, திரைத்துறைத் தொழிலாளர்களை விரக்திக்குள் தள்ளியிருப்பதுடன் பண முதலீடு செய்துள்ள தயாரிப்புத் தரப்பினரையும் கவலைக்குள் ஆழ்த்தியிருப்பதாக சொல்கின்றது கோடம்பாக்கம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top