பூமியில் இருந்து 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய இரண்டு பொருட்கள் இருப்பதை ஐரோப்பிய புவியீர்ப்பு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று கருந்துளையாகவும் மற்றொன்று சிறிய கருந்துளை அல்லது நியூட்ரோன் நட்சத்திரமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
முதலில் கூறப்பட்டது கருந்துளை என்று நிச்சயமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது சூரியனை விட 23 மடங்கு நிறை கூடியது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது கூறப்பட்ட மர்மப்பொருள் சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது சூரியனைப் போல 2.6 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை இரண்டிற்கும் அதிக வேற்றுமை இருப்பதால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.