இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இன்றைய நாள் காலை வரையான நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2617 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1981 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.அதேநேரம் 625 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இவ் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.