உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வீரியம் கொண்டுள்ளது. பல தொற்றுறுதியானவர்கள் , அதிகரிக்கும் மரணங்கள் என நாளுக்கு நாள் அதனால் ஏற்படுகின்ற அச்சம் மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டே போகிறது.
உங்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள். நாம் பல பொருட்களை கைகளால் எடுத்து பயன்படுத்துவதால், கைகளில் வைரஸ் இருக்கக்கூடும். அவ்வாறு கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுவதால், அவை நம் உடலினுள் நுழைய வாய்ப்புள்ளது.
பயன்படுத்திய ரிஷ்யு பேப்பரை உடனடியாக அப்புறப்படுத்திவிடுங்கள். இது, வைரஸ் நிறைந்துள்ள அந்த காகிதத்தால் பிறருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
பல இடங்களில், அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து, வேறு எதற்காகவும் மக்களை வெளியே போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், இருமல் மற்றும் தும்மல் பிரச்னை உள்ளவர்களை மக்கள் சந்திக்கும் வாய்ப்புகள் குறையும்.
அப்படி நீங்கள் வெளியே சென்றுள்ளீர்கள் என்றால், ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொள்வதை விடுத்து, 'பாதுகாப்பான முறையில் வரவேற்றுக் கொள்ளுங்கள்' என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
அதாவது, கை அசைத்தல், தலை தாழ்த்துதல் போன்ற முறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறது.
உங்களுக்கு தும்மல் அல்லது இருமல் வந்தால், கைக்குட்டை/ரி ஷ்யு பேப்பரை பயன்படுத்துங்கள். அப்போதைய சமயத்தில் கைவசம் அவை இல்லை என்றால், உங்களின் மணிக்கட்டை வைத்து மறைத்துகொள்ளுங்கள்.
மக்களை 2மீ சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.