தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற ஒருவரின் உடலில் D614G என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும் தன்மை உடைய கிருமியாகும். இதுவும் ஒருவகை கொரோனா வைரஸ்தான் என மலேசியா சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
இதுவரை மலேசியாவில் 45 நோயாளிகளிடம் இப்புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் பிலிப்பைன்ஸில் இருந்து மலேசியா திரும்பும் மக்களில் சிலருக்கும் 'D624G' இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே மலேசியாவில் 45 பேருக்கு வைரஸ் பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு 5 மாதம் சிறை தண்டனையும் 21 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
D614G என்ற தொற்று 10 மடங்கு வேகமாகவும் மிக எளிதாகவும் மற்றவர்களுக்கு பரவி விடும் தன்மையுடையது என்று மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எகிப்திலும் பாகிஸ்தானிலும் ஏற்கனவே இவ்வகை தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், மலேசியாவும் அந்த பட்டியலில் இணைத்துள்ளது.