முடி உதிர்ந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் சிறிய புள்ளிகளையும் காணலாம். இத்தகைய பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு நீண நீர் செல்லும் பாதையில் வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். ‘டெர்மடோபைட்டுகள்’ எனும் பூஞ்சைகள்தான் இந்த பிரச்சினைக்கு காரணமாகும்.
மற்றவர்களின் சீப்பு, படுக்கை விரிப்புகளை பகிர்ந்து கொள்வதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இது பரவும். ஆரம்பத்தில் தலையில் திட்டுக்களாக முடி உதிர்ந்து பின்பு வழுக்கையை உருவாக்கும்.
குழந்தைகளுக்கு தலைப்பகுதியில் மட்டுமல்ல புருவங்களிலும் முடி இழப்பு ஏற்பட்டால் அதற்கு ‘அலோபீசியா அரேட்டா’ பாதிப்புதான் காரணமாகும்.
இது பரம்பரை மரபணுக்கள் வழியாக பரவக்கூடும். குடும் பத்தில் யாருக்காவது முடக்கு வாதம் அல்லது நீரிழிவு நோய் இருந்தால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம்.
சில குழந்தைகளுக்கு தலைமுடியை இழுக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு முடியாக இழுத்துக்கொண்டிருப்பார்கள். கவலை அல்லது மன அழுத்தம் அதற்கு காரணமாக இருக்கலாம்.
மன அழுத்தம் காரணமாக இந்த பாதிப்பு நேரும். ஊட்டச்சத்து குறைபாடும் முடி உதிர்வதை தூண்டிவிடும். ஆதலால் குழந்தைகளுக்கு சமச்சீரான உணவு கொடுப்பதை பெற்றோர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.