பிரபல தொலைக்காட்சி நடிகையான ஷிவானி நாராயணன் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது தெரிந்ததே.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவு அளித்தாலும் நெட்டிசன்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷிவானி நாராயணன் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது:எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை பதிவிடுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஒருசிலர் என்னைப்பற்றி மலிவாக விமர்சனம் செய்கின்றனர்.இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா? என்று கூறியுள்ளார் மேலும் நான் என்ன ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற உரிமை எனக்கு உள்ளது.எதை அணிய வேண்டும் எதை அணியக் கூடாது என்று எனக்கு தெரியும். என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்ந்து உள்ளார்கள்.நான் எதையும் சுயமாக தேர்வு செய்ததற்கான சுதந்திரத்தை எனக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள் .
நான் பதிவு செய்யும் புகைப்படங்கள்,ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்கு அல்ல.அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை.என்னுடைய சுய விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன்.எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷிவானி நாராயணனின் இந்த பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://www.instagram.com/p/CFzMKnanfnV/?igshid=1ca5dafg0lnxh