இந்தியாவிலுள்ள பெண்களுக்கு தொடர்ந்தும் பாலியல் ரீதியான கொடுமைகள் அரங்கேறிய வண்ணமுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசத்திலுள்ள பகுதியில், தொடர்ச்சியாக இரு இளம் பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பரிதாபமாகக் கொலை செய்யப்பட்டமை, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்களை வன்மையாக கண்டித்து பல திரை நட்சத்திரங்கள், சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்த் திரையுலகில், தனித்துவமான தனது நடிப்பால் அதிக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மதுபாலா. இவர் தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தனது கண்டனைத்தை வெளியிட்டுள்ளார்.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என, நடிகை மதுபாலா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இடம்பெறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விசாரணைகளை தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை மதுபாலா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.