புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தென்படாததினை அடுத்து நாளை மறுதினம், வெளிளிக்கிழமை நோன்பு ஆரம்பமாகுமென, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சகல இஸ்லாமியர்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் தமது புனித நோன்பினை நோற்க ஆரம்பிப்பார்கள் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தலைவர் மௌலவி ஏ.டபிள்யூ.எம்.றியால் அறிவித்துள்ளார்.