சர்வதேச நாடுகளை பெரிதும் பாதித்துள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, பல மருத்துவ நிபுணர்கள் போராடி வருகின்றனர். இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு, முன்னணி நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவொன்று, தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக , அண்மையில் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை ஏற்றிக் கொள்பவர்கள், குரங்குகளாக தோற்றம் பெறுவார்கள் என, ரஷ்யா அதிர்ச்சித் தகவலைக் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்துமே ஆபத்தானவை என்பதுடன், அவற்றை பயன்படுத்துவோர் மனிதர்களாக இருக்கவே முடியாது என, தற்போது சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
அத்துடன் இது குறித்த பல படங்களும், காணொளிகளும் ரஷ்யாவில் இயங்கி வரும் பிரபலமான தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து மக்கள் மிகுந்த பீதியில் உள்ளதாக தெரிய வருகின்றது. எனினும் தாம் தயாரித்து வரும் தடுப்பூசி, எந்த விதத்திலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என, இங்கிலாந்திலுள்ள விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.