அதாவது வாழைப்பழத்தையும்,பாலையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும் என புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆரோக்கியம் அடிப்படையில் பாலையும்,வாழைப்பழத்தையும் தான் சாப்பிடுவார்கள்.மேலும் தசைகள் வலுப்பெறவும்,ஊட்டச்சத்து அதிகரிக்கவும் மருத்துவர்களும் பாலும் ,பழமும் தினமும் உட்கொள்ள சொல்வார்கள்.இவை இரண்டிலும் கல்சியம்,பொட்டாசியம்,நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
ஆனாலும் இந்த ஆய்வுத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவை இரண்டையும் ஒன்றாகச் சாப்பிட்டால் ஜீரண பாதையின் செயல்பாட்டை குறைக்குமாம்.குறிப்பாக சைனஸ் பிரச்னை, சுவாசப் பிரச்னை கொண்டோருக்கு இந்த கலவை உணவை பரிந்துரைப்பது மிகமிகத் தவறு என்கின்றனர்.அதேபோல் கர்ப்பிணிகளும் பாலும்,வாழைப்பழத்தையும் கலந்து அருந்தக் கூடாது. வேண்டுமென்றால் இரண்டையும் இடைவேளை விட்டு உண்பது தாய்க்கும்,கருவுக்கும் நல்லது.
இதனால் அது அலர்ஜியாக மாறி தொற்று,வயிற்றுக் கோளாறு,வாந்தி போன்றவை உண்டாகும். குறிப்பாக கர்ப்பிணிகள் இவ்வாறு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.மேலும் இந்த கலவையானது சளி,இருமல்,வாந்தி,வயிற்றுப் போக்கு,அலர்ஜி போன்ற உபாதைகளையும் உண்டாக்கும்“ என்று கூறியுள்ளார்.