நேற்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டிகளை பொறுத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது அந்த வகையில் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்கள் .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 176 ஓட்டங்கள்களை பெற்றுக்கொண்டனர்.இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து,சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது.முதலில் பஞ்சாப் அணி விளையாடியது.சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ஓவர் நிறைவில் 5 ஓட்டங்களயே பெற்றுக்கொண்டது .
தொடர்ந்து இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தது.அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ஓட்டங்கள் எடுத்து வெற்றியடைந்தது.