யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் பேய் மாமா. விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய யோகி பாபு இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஷக்தி சிதம்பரம் என்னை கதாநாயகனாக நடிக்க வைக்கிறார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இந்தக் கதையை முதலில் வைகைப்புயல் வடிவேலுக்காக எழுதினேன் என்று ஷக்தி சொன்னார். உடனே நான் “வடிவேல் ஜீனியஸ். அதனால் எனக்கு எப்படி செட்டாகும்?” என்று கேட்டேன்.
இந்தப் படம் வெற்றி அடைய எல்லோருடைய ஒத்துழைப்பையும் எதிர்பார்த்திருக்கின்றேன். நான் சம்பள விஷயத்தில் அவ்வளவு இறுக்கமாக இருப்பது கிடையாது. சமீபத்தில் கூட ஒரு பெண் உதவி இயக்குனர், ஒரு கதை பண்ணிருக்கேன் நீங்கதான் பண்ணிக் கொடுக்க வேண்டும். ஆனால் என்னிடம் போதிய நிதி கிடையாது. இந்தப் படம் முடிந்தால் தான் எனக்கு கல்யாணம் நடக்குமென்று கூறினார்.
நான் உடனே “இலவசமாக நடித்து தருகிறேன். உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்” என்று சொன்னேன். இப்படி நிறைய விட்டிக்கொடுத்துட்டு தான் இருக்குறேன். படத்தின் டிரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான்.” என கூறியுள்ளார்.