3வது முறையாக பீட்டர் போல் என்பவரை காதலித்து கடந்த ஜுன் 27ம் திகதி திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டர் போல் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வந்துள்ளார்.
நேற்றைய தினம் பீட்டர் போலும் வனிதாவும் பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படடன.
இதுகுறித்து வனிதா தெரிவிக்கையில்...
பீட்டர் போல் உடல் நிலை சரியில்லாமல்
மருத்துவமணையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஏன் 14 நாட்கள் தனிமையில் கூட சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் அவர் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தவில்லை. நான் அவரை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.
ஆனால் நான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால் திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துவிட்டது என மிகவும் உருக்கமாக கண்கலங்கி கதறி அழுது பேசினார் வனிதா விஜயகுமார்.
இவர் இவ்வாறு மன உருக்கமாக அழுது பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.