இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், தனது குடும்பத்தை நடத்த, தற்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போரிஸ் ஜோன்சன் தற்போது 1 லட்சத்து 50 ஆயிரத்து 402 பவுண்ஸ்களை ஊதியமாக பெற்று வருகிறார். இது அவரது முந்தைய வருவாயோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.
போரிஸ் ஜோன்சன், பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்ஸ்களை ஊதியமாக பெற்று வந்தார்.
போரிஸ் ஜோன்சனுக்கு 6 குழந்தைகள், அவர்களுக்கு தேவையான செலவுகளை போரிஸ் ஜோன்சன் கவனிக்க வேண்டி உள்ளது.
போரிஸ் ஜோன்சனின் மனைவி மரினா வீலருக்கு, விவாகரத்து நடைமுறைப்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டி உள்ளது.
தற்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்பதால் அடுத்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.