இந்தியாவின் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் திடீர் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் 23 வயதான பெண்ணொருவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 நாட்கள் கொண்டாட்டமாக கடந்த நிலையில், திடீரென குறித்த நபரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எதிர்பாராத விதத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குறித்த நபர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். தனது ஆசை மனைவியின் மீது கொண்ட காதலால், குறித்த நபரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.