சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் IPL தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரையில் பிளே-ஆஃப்ஸ் சென்றுள்ளது . தற்பொழுது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 13 IPL போட்டியில் அந்த வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை . அதுமட்டும் அல்லாமல் இதுவரை நடந்த 10 போட்டிகளில் 3 போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்த 13 வது IPL போட்டியில் பிளே-ஆஃப்ஸ் க்கு செல்ல வேண்டும் எனறால் அடுத்து வருகின்ற நன்கு போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும் . அதுமட்டும் அல்லாமல் சென்னை அணி மும்பை, ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. இந்த நான்கிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
அதேவேளையில் தற்போது முதல் மூன்று இடங்களில் இருக்கும் மும்பை. ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தங்களுடைய வெற்றியை அப்படியே தொடர வேண்டும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஜெயிக்க வேண்டும். ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு போட்டிகளுக்கு மேல் வெற்றிபெற கூடாது. இப்படி நடந்தால் மாத்திரமே சென்னை சூப்பர்கிங்ஸ் அணி பிளே-ஆஃப்ஸ் செல்ல முடியும்