கொரோனா வைரஸ் நுரையீரலை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் சிலருக்கு இது மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரத்த நாளங்களின் சில பகுதிகளில் ரத்தம் உறைந்து விடுகிறது. இவ்வாறு ரத்தம் உறைவதால் உடம்பில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
எங்களது உள் காது தான் செவித்திறனுக்கு முக்கியமான பகுதியாகும். அந்த பகுதியின் ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதனால் செவித் திறன் பாதிப்பு ஏற்படுகிறதாம். இதனால் கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகள் சிலருக்கு வழங்கப்படும்.
மருத்துவரின் உரிய ஆலோசனையுடன் இந்த மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும் என காது மூக்கு தொண்டை நிபுணர்கள் கூறுகின்றனர்.