பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மனித உடலங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில், எகிப்தில் இன்று வரை உள்ளமை, பெரும் வியப்பைத் தருகின்றன.
இது குறித்து பல விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சிகளை முன்னெடுத்த போதிலும், இன்றுவரை எகிப்திய மம்மிக்கள் மர்மமாகவே உள்ளன.
தற்போது 3000 ஆண்டுகள் பழமையான ஒரு உடலத்தை தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 18 வயதான ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் உடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, குறித்த தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் குறித்த உடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இடது பக்க எலும்பு உடைந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனை அடுத்து குறித்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், பலமான ஒரு ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மேலதிக ஆராய்ச்சி தொடர்வதாக, தொல்பொருள் நிபுணர்கள் கூறியுள்ளனர்.