குளிர்ந்த காற்றும், வெப்பமும் உதடுகளுக்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.
தண்ணீர்: குளிர்காலத்திலும், பருவநிலை மாறும்போதும் உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உதடுகளை கடிப்பது, உதட்டு அடுக்குகளில் இறந்திருக்கும் செல்களை நாக்கால் வருடுவது போன்றவை நல்ல பழக்கம் அல்ல. இது ரத்தக்கசிவு மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
அதனால் பற்கள், நாக்கால் உதட்டை வருடுவதை தவிர்க்க வேண்டும். உதட்டில் வறட்சி, வெடிப்பு உண்டானால் அலட்சியமாக இருக்கக்கூடாது. அது பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகி விடும்.
கற்றாழை: உலர்ந்த உதடுகளை பாதுகாக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். கற்றாழை நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உலர் வடைந்த, வெடிப்பு தன்மை கொண்ட உதடுகளுக்கு நல்ல பலனை தரும்.
தேங்காய் எண்ணெய்: இது சருமத்தின் மென்மையை பராமரிக்க உதவும். முகப்பரு, வறண்ட சருமம், சரும துளைகள், வெயில் மற்றும் உதடு உலர்வது போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
வெண்ணெய் : இது உதடுகளை பாதுகாக்கும் சிறந்த இயற்கை பொருளாகும். ஓரிரு நாட்கள் வெண்ணெய்யை பயன்படுத்தினால் உலர்வடைந்த உதடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
தேன்: இதற்கு காயத்தை குணப்படுத்தும் தன்மை உண்டு. சரும பராமரிப்புக்கும் ஏற்றது. வெடிப்புத் தன்மை கொண்ட உதடுகளை பாதுகாப்பதற்கு தேன் உதவுகிறது. உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக் கவும் துணைபுரியும்.