SooriyanFM Gossip - சனம் பற்றி மோசமாக பேசிய பாலா - PROMO DELETE செய்யப்பட்டது ஏன்? - காணொளி உள்ளே...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,856 Views
பிக்பொஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் பாலாஜி, சனமிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். முக்கியமாக அவரை பார்த்து "இந்த வாரம் நீ வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். உன்னை எப்படி விட்டார்கள்" என்று அவர் கேட்டது, பலராலும் வெறுக்கப்பட்டது.
அதேபோன்று சனம் விளையாட்டாக பாலாஜியை எட்டி உதைத்தது, பாலாஜிக்கு பிடிக்கவில்லை. இது குறித்த வழக்கு விசாரணையும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அதே விஷயத்தைப் பற்றி பாலாஜி மற்றும் சனம் ஆகியோர் வாதிடுகின்றனர். நேற்றைய நாள் போலவே இன்றும் நடுவராக சுஜித்ரா செயற்படவுள்ளார்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரமோ திடீரென டிலிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாலா, சனத்தை கடுமையாக பேசியதன் காரணமாகவே, குறித்த பதிவு டிலிட் செய்யப்பட்டது என, பல தரப்பினர் கூறி வருகின்றனர்.
எவ்வாறாயினும் இன்றைய நிகழ்ச்சியின் முடிவிலேயே, இந்த கேள்விக்கான பதில் எமக்கு கிடைக்கும்.