தமிழ்த்திரையுலகில் கிழக்குச் சீமையிலே திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகிய நடிகர் தவசி,பல குணச்சித்திர வேடங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
குறிப்பாக இவர் நடித்து வெளிவந்த "வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்" மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் நடிகர் தவசி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புற்று நோயால் தனது கம்பீரமான தோற்றத்தை இழந்த தவசி,சிகிச்சைகளுக்கு போதுமான அளவு பணமும் இல்லாத நிலையில் பெரும் சிரமப்படுவதாக செய்திகள் கசிந்தன.
இதனை அடுத்து,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன்,சிம்பு,சூரி ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.அத்துடன் நடிகர் தவசி விரைவில் மீண்டு வர வேண்டும் என,தாங்கள் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.