நடிப்பைக் குறைத்து விட்டு அரசியிலில் தீவிரம் காட்டியுள்ள நடிகர் கருணாஸ், 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தெய்வீக யாத்திரை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஊடகங்களிடம் கருத்துரைத்த கருணாஸ், தற்போது தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது தவறு என்றும், கூடிய சீக்கிரம் அந்த முடிவை மீளப் பெற்று 50% அனுமதியை மாத்திரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடிகர் சிம்பு பேசியது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனாவை கொல்வோம், வெல்வோம் என்று சிம்பு பஞ்ச் வசனம் பேசுவது கோமாளித்தனமானது என்றும், சிம்புவுக்கு கொரோனா வந்தால் தான் தெரியும், நான் அதைக் கடந்து வந்தவன் என கருணாஸ் காட்டமாகப் பேசியுள்ளார்.
இவரது கருத்து சிம்பு ரசிகர்கள் பலர், கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.