மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில்,நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது.இதனையடுத்து படத்தின் பிரதியை இதுவரை யார் யாரிடம் கொடுத்தோம் என்ற ரீதியில் படக்குழுவினர் விசாரணையை ஆரம்பித்தனர்.
அதன்போது வெளியீட்டுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் பிரதி கொடுக்கப்பட்டுள்ளது.அந்த நிறுவனத்தை சார்ந்த நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து,கசிய விட்டு உள்ளது இதன்போது தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து தயவுசெய்து சட்டவிரோதமாக கசிந்துள்ள காட்சிகளைப் பகிராதீர்கள் என மாஸ்டர் படக் குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.அதேநேரம் இன்று அவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.இதேவேளை குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க Tweeter நிறுவனமும் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளதாக அறிய முடிகிறது.