இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன்,நிதி அகர்வால்,நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்த 'ஈஸ்வரன்'படத்தை தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும் ஜனவரி 14ம் திகதி அன்றே ,வெளிநாடுகளிலும் ஓடிடியில் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பையடுத்து படத்தை தமிழ்நாட்டில் வெளியிடப் போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்தது.அதனையடுத்து ஈஸ்வரன் திரைப்படம் தொடர்பாக பல சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில் இப்போது அதற்கான விளக்கங்கள் கிடைத்துள்ளன.
தற்போது ஈஸ்வரன் படத் தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா வெளிநாடு ஓடிடி வெளியீட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஈஸ்வரன் படத்தை வெளிநாடுகளில் ஓடிடி மூலம் வெளியிடுவதாக நாங்கள் எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது.ஓடிடியில் வெளியிடுவதை நிறுத்தி வைக்கிறோம்.திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் எங்களுக்கு மேலும் தியேட்டர்களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்,”எனத் தெரிவித்துள்ளனர்.