சர்ச்சைகளின் நாயகி நடிகை வனிதா வெளியிட்டுள்ள காணொளி ஒன்று மீண்டும் திரைத்துறையினர் தொடக்கம் பலரதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகை வனிதா - பீட்டர் போல் திருமணம் தொடக்கம் இருவரது மணமுறிவு வரைக்கும் நடந்த சம்பவங்கள் வெறும்வாய் மெல்பவர்களுக்கு அவள் கிடைத்த கதையாக இணையவாசிகளுக்கு தொடர் பேசுபொருளாக இருந்த நிலையில்,வனிதாவின் கையில் குத்தப்பட்டிருந்த 'டாட்டூ' எனப்படும் பச்சை,"பீட்டர் போல்" என்று காணப்பட்டது.
தற்போது,குறித்த டாட்டூ தொடர்பிலேயே வனிதாவின் காணொளி பதிவு வெளியாகியுள்ளது.குறித்த காணொளியில், 'பீட்டர் போல்' எனும் பெயர் மாற்றப்பட்டு சீன மொழி வரி வடிவில் அமைந்ததும் 'இரட்டிப்பு மகிழ்ச்சி' என்ற பொருள் தரும் வகையிலான பச்சை குத்தியுள்ளதாக வனிதா தெரிவித்திருக்கிறார்.
அத்துடன்,தனது மகளுடனான உரையாடலாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் காணொளியில்,"இனிமேல் பச்சை குத்தும் எண்ணம் உள்ளதா"என வனிதாவின் மகள் கேட்க்கும் கேள்விக்கு நடிகை வனிதா பதிலளிக்கையில்,இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன்.என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த சீன மொழி வடிவ டாட்டூவை குத்தியுள்ளேன் என அவர் கூறுகின்ற காட்சிக்கு பலவித கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.