சர்வதேச நாடுகளை பாரியளவில் தாக்கியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட உலகின் முதலாவது நோயாளர் என கருதப்படுபவர், தற்போது மாயமாகியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் மாயமானவரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயற்பாடு என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் என்ற பெண் தான், உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார்.
சீனா அதிகாரப்பூர்வமாக கொரோனா பரவலை ஒப்புக்கொள்வதற்கு சில மாதங்கள் முன்பே, யான்லிங்க்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது
யான்லிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறுத்துள்ள சீனாவின் வைரஸ் ஆய்வு நிறுவகம், அவர் அந்த நிறுவனத்தில் படித்து முடித்ததுமே வேறிடத்தில் வாழவும், வேலை செய்யவும் சென்று விட்டதாக தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து யான்லிங் , தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கு கொரோனா என்பதெல்லாம் பொய் என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
எனினும் அதற்குப் பின் யான்லிங் மாயமாகிவிட்டார். இந்த நிலையில், அவர் சீனாவால் மறைக்கப்பட்டு இருக்கலாம் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.