கடந்த தினம் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருந்தது.
பின்பு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6.30 அளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.