கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.பலக்கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் முடிவு எட்டப்படவில்லை. மேலும் குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியும் விவசாயிகள் நடத்தப்பட்டது.இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரி மாவட்டம் அருமனை அருகே பொறியாளர் ஒருவர்,தனது திருமணத்தின் போது டிராக்டரில் மணமகளுடன் ஊர்வலமாக வந்து,விவசாயிகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
வரவேற்பின் போது எப்போதும் அலங்கரிக்கப்பட்ட காரில் தான் மணமக்கள் இருவரும் ஊர்வலமாக வருவார்கள்.ஜெரின் மற்றும் பாத்திமா திருமணத்தில் இருவரும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர்.இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து கூறிய தம்பதிகள், 'விவசாயிகள் தங்களது கோரிக்கைக்காக கடும் பனி,வெயிலை கூட பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள்.அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் ஆதரவு தெரிவிக்கவே அவர்களை நினைவுப்படுத்தும் வகையில் டிராக்டரில் ஊர்வலமாக வந்தோம்' எனக் கூறியுள்ளனர்.