சின்னத்திரையின் மூலம் தனக்கான தனித்துவமான ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த ஷிவானி, பிக்பொஸ் மேடையை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டதாக, பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும், தனக்கு பிக்பொஸ் சிறந்த களத்தை உருவாக்கித் தந்துள்ளதாக ஷிவானி தெரிவித்துள்ளார்.
தான் சின்னத்திரையில் பெற்ற பேரும், புகழும் பிக்பொஸ் மூலம் இரட்டிப்பாகவே கிடைத்து விட்டதாக ஷிவானி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர், தனக்கு சினிமாவில் நடிப்பதற்கு பல வாய்ப்புக்கள் வந்தமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக ஷிவானி தெரிவித்துள்ளார்.