விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரம் முதல் OTTயிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாது பல நாடுகளிலும் மாஸ்டர் திரைப்படம் பார்க்க மக்கள் கூட்டம் இன்னமும் அலை மோதிக் கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண்மணி மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் பலமுறை முயற்சித்தும் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வர முடியவில்லை. இவர் பிறந்து, வளர்ந்து, படித்தது அனைத்துமே சென்னை மயிலாப்பூரில் தான்.
இதையடுத்து நீண்ட முயற்சிக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து சென்னைக்கு தனது குடும்பத்தினருடன் வந்து சேர்ந்தார் ஆஷ்லினா. வந்தவுடன் முதல் வேலையாக மாஸ்டர் படம் பார்ப்பதற்காக சென்றார். ஆனால் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்தார்.
இதையடுத்து அண்ணாசாலையில் உள்ள ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார்.